யார் அவர்,
எங்கு இருக்கிறார்?
கேட்பவர் கேட்டுக் கொண்டே
இருக்கட்டும்.
பஞ்ச பூதங்களில்
காற்று கண்ணுக்குத்
தெரிவதில்லை -
காற்றே இல்லை என்போமா?
இறைவன் என்றழைக்கப்
பிடிக்கவில்லையா?
எங்கும் நிறைந்து இருக்கும்
ஏகன் அனேகனை
யாது சொல்லியும்
அழையுங்கள்.
இல்லை என்று சொல்வதற்கும்
உங்களுக்கு இடம் அளித்திருக்கிறான் -
தாராளமாய், வாய் வலிக்க
சொல்லிக் கொண்டே
இருங்கள்.
கேழ்வரகிலே நெய்
வடிகிறது என்று
சொல்வதை கேட்பவர்களும்
கேட்டுக் கொண்டே இருக்கட்டும்.
இறைவன் காணும் பொருளா?
உணரும் மஹா சக்தி அன்றோ!
How long to feel
The Presence?
Though to say always,
Even a split of second
Realizing would sure
Lead to the constant
Feel of the Presence,
Presence of Godliness,
The Bliss.
May God Bless All.
No comments:
Post a Comment