இருக்கிறாயா?
தினம், தினம் ஆலயம்
தொழுபவருக்கும்
இக்கட்டான தருணங்களில்
இவ்வினாக்கள் தோன்றுவது உண்டு.
கடவுளைக் கண்டவர்
விண்டதில்லைதான்.
ஆனாலும் இறைவன்
இல்லாமல் இல்லை.
பின்,
கடவுளைக் காண்பது,
Sorry, Sorry,
உணர்வது எளிதா?
ஏன் இல்லை?!
தியானியுங்கள்.
கடவுளில் திளைப்பீர்கள்.
An Ecstasy
Bhagavan Ramakrishna Paramahans,
Bhagavan Ramana Maharshi
Felt.
Such a Wonder words
Can't describe.
இறைவன் தத்ரூபமாக பிரசன்னமாவாரா?
ஒரு பிரபல திரைப் பிரமுகருக்கு அஞ்சலை புத்திரர் ஆஞ்சநேய சுவாமிக்கு ஆலயம் எழுப்ப தோன்றிற்று. அவர் இல்லம் அருகிலேயே பொருத்தமான் இடம் இருந்தது. ஆனால் அந்த இடம் பக்கத்து வீட்டுக்காரருக்கு சொந்தமானது. அன்பரும், "ஐயா இந்த இடம் விலைக்குத்குத் தருவீர்களா, பகவான் ஹனுமனுக்கு ஆலயம் நிர்மாணிக்க உகந்த இடம்"", என்று கேட்டார்.
பக்கத்து வீட்டுக்காரர் ஒத்துக் கொள்ளவில்லை. மாறாக அன்பரிடம், " உன் இடத்தை தா, நான் வாங்கிக் கொள்கிறேன்" என்றாராம்.
வெகு சில நாட்களே ஆகின.
அன்பருக்கு ஒரே ஆச்சர்யம். தன் இடத்தை தரமாட்டேன், மாறாக உன் இடத்தை வாங்கிக் கொள்கிறேன் என்ற பக்கத்து வீட்டுக்காரர், திடீரென்று வந்து, "அன்பரே என் இடத்தைத் தர தயாராக இருக்கிறேன். தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள் ", என்றாராம்.
எல்லாம் அவன் செயல்.
தொக்கிக் கொண்டே கேள்விகள் வராதா?
மஹா சக்தியுடையவன் கடவுள் என்றால், உலகில் ஏன் இவ்வளவு கஷ்டங்கள், போராட்டங்கள்.
புதிர் அனைத்திற்கும், விடைகள் அவனிடத்தில். நாம் செய்வதெல்லாம் நல்லவை ஒன்றே.
வாழ்க வளமுடன்.