For the நல்ல உள்ளம் who shared this Poignant Picture.
இதைப் பார்த்ததும் நினைவில் தோன்றியது:
நம் இல்லங்களில் எல்லாம் ஒரு சம்பாஷனை நிகழ்வதுண்டு.
தினசரி காய்கறி விற்கும் மூதாட்டியிடம் கீரை வாங்க அப்பத்தா பேரம் செய்வார்களாம்.
அதே அப்பத்தா வியாபாரம் முடிந்ததும் மூதாட்டிக்கு மூன்று இட்லிகளும், காஃபியும் கொடுப்பார்களாம்.
வியப்பு மேலிட்ட பேத்தி கேட்பாளாம்,
"ஏன் அப்பத்தா, கீரை வாங்க பேரம் பேசுற, இட்லியும், காஃபியும் தாராளமாகத் தருகிறாயே?" என்று.
அப்பத்தாவின் பதில்:
"செல்லமே, வியாபாரத்துல கணக்கா இருக்கணும். தர்மத்துல கணக்குப் பார்க்கக் கூடாது".
இப்படிச் சொல்கிற அப்பத்தாக்களும் பாத்திரம் அறிந்தும், அளவாகவும் செயல்படுகிறவர்களே.
அய்யாக்கள் கடல் கடந்து வாணிகம் செய்தாலும் சிக்கனமாய் சேமித்து பெருங்குடும்பம், கூட்டுக் குடும்பம் என தீர்க்கமாய்ச் சிந்தித்து அப்பத்தாக்கள் கட்டியவையே கோட்டை போன்ற நம் இல்லங்கள்.
அப்பத்தாக்களின் தீர்க்கமும், கூட்டுக் குடும்பங்களும் மீண்டும் வேண்டும் என்பது நியாயமான ஆசைதானே?!
No comments:
Post a Comment