Saturday, November 6, 2021

உணவே மருந்து மருந்தே உணவு

உணவே மருந்து 
மருந்தே உணவு 
உணவே மருந்து 
மருந்தே உணவு 

இது
ஆரோக்யம் விரும்பிகளின்,
இயற்கை மருத்துவர்களின்

தாரக மந்திரம். 

நல்லது 
பூங்காக்களில் நடக்கிறார்கள்.
கடற்கரையில் நடக்கிறார்கள். 
நடைப் பயிற்சி 
நல்ல பயிற்சி. 

நடப்பவர்களெல்லாம்
நல் ஆகுதியுடன்
ராஜாக்கள் போலிருப்பீர்கள். 

நாம் உட்கொள்கிற
உணவு 
உட்கிறகிக்கப் பட்டு 
சக்தி நிலை எய்துகிறோம். 

பயிற்சி சிறிதேனும் இல்லையா?

சற்றே உற்று நோக்குஙகள். 

ஒரு சராசரி மனிதன் 
ஒரு நாளில் உட்கொள்கிற
உணவின் அளவு 
ஏறத்தாழ இரண்டு கிலோ. 
ஒரு மாதத்திற்கு 60 கிலோ. 
ஒரு வருடத்தில் ஒரு டன். 

ஒரு டன் என்பது 
ஒரு giraffe ன் எடை. 

இதே விகிதத்தில் 
அரை நூற்றாண்டு 
உட்கொண்டால், 

எடை எவ்வளவு இருக்கும்?

கிட்டத்தட்ட பத்து 
African வளர்ந்த யானைகளின் 
எடைக்குச் சமமாக. 

ஆக
உணவு கிரஹிக்கப் பட
வேண்டும் என்பது 
யாவரும் அறிந்ததே. 

சாலச் சிறந்த திருமந்திரத்துடன்
நிறைவு செய்வோம்.

உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்,

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு.

வாழ்க வளமுடன்.








No comments:

Post a Comment