நான்
நீ
எனது
உனது
அது
இது
இத்தனை பரிமாணங்களா?!
ஆழ்ந்து உறங்குகிறோம்.
யாதொரு பிரக்ஞையும் இல்லை.
அப்படியானால்
நாம் இல்லையா?
நாமா?
நாம் இருந்தோம்தானே?
நாமென்றால்
உடலா,
மனமா,
புத்தியா ?
எது இருந்தது.
யாவும் கடந்த உயிர் --
Transcendental,
The spirit -
நிலைதானே.
அந்த உயர், உயிர்
நிலையை
ஆராதிப்போமா.
உறக்கத்திலிருந்து
விழிப்பு.
சுகாசனத்தில் -
சிரமமின்றி அமர்கிற நிலை -
கண்கள் மூடித்
தியான நிலைக்கு.
கண்கள் அயர்ந்த நிலையிலும்
மனது
கடல் அலை கரைகளைத்
தொடுவது போல
அலை பாய்ந்து கொண்டே
இருக்கும்.
தடுக்க வேண்டாம்.
தானே ஓய்ந்து ஓய்ந்து
உயிர் நிலையில் -
ஒன்றான நிலையில் -
பேதங்களற்ற
பரமானந்த -
Blissful Awareness state-
நிலையிலே ஆழ்ந்திருக்கும்.
Om! purnamadah purnamidam,
purnāt purnam-udacyate.
purnasya purnamādāya,
purnam-eva-avashishyate.
Om! Shantih! Shantih! Shantih!
Thursday, August 28, 2025
நான் நீ எனது உனது அது இது...... யார், எது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment